நீதி தேவதை Neethi Devathai (Tamilpiththan kavithai-35) Tamil Kavithaigal

0

neethi devathai

கண்களை மூடினேன்
அயர்ந்து போனேன்
கம்பிக் கதவுகளுக்கிடையே
எட்டிப் பார்த்தாள்
நீதி தேவதை..!

ஏய் மானிடா
ஏன் என் கண்களை
கட்டிவிட்டாய்?
என் கண்ணீர் துளிகளை
பார்க்க கூடாதென்றா?
உன் இதயத்தின் கதவுகளையும்
மூடி விட்டாய்..!

இறுதியில் வழி தெரியாது
நின்ற என்னை
கயவர்கள் பிடித்துக் கொண்டனர்
அடைத்து விட்டனர்
ஆயுள் கைதியாய்
கம்பிக் கதவுகளுக்கிடையில்..!

திடுக்கிட்டு கண் விழித்தேன்
காணவில்லை நீதி தேவதையை
மீண்டும் கண்களை மூடுகிறேன்
அந்த அழகு மங்கையை
கனவிலாவது விடுவித்துவிட‌
வேண்டும் என்ற ஆசையில்..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜூலை 29 முதல் நவம்பர் 24 வரை நான்கு மாத காலம் ஓட்டாண்டியையும் கோடிஸ்வரராக்கும் குரு வக்ர பெயர்ச்சி!
Next articleஇன்றைய ராசி பலன் 28.07.2022 Today Rasi Palan 28-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!