மூலிகை Mooligai மூலிகை பயன்கள்|மூலிகைகளின் பெயர்கள்|Mooligai in Tamil – Medicinal Plants. mooligaigal

0

மூலிகை (Mooligai)|மூலிகை மருத்துவம்|மூலிகை வகைகள்|மூலிகை பயன்கள்|மூலிகை பெயர்கள்|Mooligai in Tamil | mooligai benefits in tamil | Mooligai Chedigal | மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும் | நோய்களுக்கு நிவாரணம் தரும் சில மூலிகைகளின் பயன்கள் | மூலிகைகள் பட்டியல் |

Mooligai

மூலிகை தாவரங்களின் பயன்கள் | Mooligai Uses In Tamil

அசோகு
அமுக்கரா
அம்மான் பச்சரிசி
அரசந்துளிர் இலை
அரிவாள்மனைப்பூண்டு
அறுகம்புல்
ஆடாதோடை
ஆடுதீண்டாப்பாளை
ஆமணக்கு
ஆல்
ஆவாரை
ஆனை நெருஞ்சில்
இலந்தை
இலவு
இலுப்பை
இம்பூறல்
உசில்
ஒதியன்
உப்பிலாங்கொடி
ஊசித்தகரை
எருக்கு
எழுத்தாணிப்பூண்டு
ஓமவல்லி
ஓரிதழ் தாமரை
கண்டங்கத்திரி
கரிசாலை
ஊமத்தை
கருணை
கருவேல்
கல்யாண் முருங்கை
கழற்சி
களா
கறிவேம்பு
அவுரி
கானாவாழை
கிரந்தி நாயகம்
கீழாநெல்லி
குப்பைமேனி
சோற்றுக் கற்றாழை
கொட்டைக்கரந்தை
கோவை
கோபுரந்தாங்கி
சத்திச்சாரனை
சரக்கொன்றை
சிற்றாமுட்டி
சிவனார்வேம்பு
சிறுநெருஞ்சில்
சிறுகண்பீளை
சீந்தில்
சீமை அகத்தி
சுண்டை
செம்பரத்தை
தண்ணீர்விட்டான் கிழங்கு
தழுதாழை
திருநீற்றுப்பச்சிலை
துத்தி
தும்பை
துளசி
தூதுவேளை
தொட்டால்சிணுங்கி
தேள்கொடுக்கு
நஞ்சறுப்பான்
நத்தைச்சூரி
நந்தியாவட்டம்
நல்வேளை (தைவேளை)
நன்னாரி
நாகமல்லி
நாயுருவி
நாய்த்துளசி
நாய்வேளை
நித்யகல்யாணி
நிலப்பனை
நிலவேம்பு
நிலாவாரை
நீர்ப்பிரமி

அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE Ashoka Tree – Ashoka Mooligai

100 கிராம் அளவு உள்ள அசோகு மரப்பட்டையினை சிதைத்து 400 மி.லி. தண்ணீர் விட்டுக் நன்கு காய்ச்சி அதனை 100 மி.லியாக வற்ற வைத்து, அதனை 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகி வரும் போது பெரும்பாடு நோய் அகலும்.

அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE

உடல் பலவீனம், தளர்ச்சி போன்றனவற்றை நீக்குவதற்கு அமுக்கராக் கிழங்கினை தூளாக்கி தேனில் குழைத்து காலை மற்றும் மாலை சாப்பிடுதல் வேண்டும். மேலும், படுக்கைப்புண் மற்றும் வீக்கம் ஆகியன குணமடைவதற்கு அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசுதல் வேண்டும்.

அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE – Asthma Plant

இதன் இலையினைச் சமைத்து உண்யும் போது உடலிலுள்ள் வறட்சி தன்மை அகலுவதோடு, வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண்களும் ஆறுகின்ற அதேவேளை இதன் பாலைத்தடவி வரும் போது நகச்சுற்று, முகப்பரு மற்றும் பால்பரு என்பன மறைவதுடன், கால் ஆணியின் வலியும் குறையும். சிறப்பாக, 30 கிராம் அளவுள்ள பூவினை நன்கு அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து 1 கிழமை சாப்பிட்டு வரும் போது தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

அரசு – Ficus religlosa – MORACEAE

புண்கள் ஆறுவதற்கு அரசந்துளிரின் இலைகளை நன்கு அரைத்து புண்களின் மீது பற்று போடுதலும், உயிர் அணுக்கள் பெருக்கி ஆண் மலட்டு தன்மையை நீக்குவதற்கு அரசு விதைத் தூளை சாப்பிட்டு வருதலும், பெண் மலட்டு தன்மையினை நீக்குவதற்கு அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வருதலும் சிறப்பான மருந்தாக காணப்படுகின்றன.

அரிவாள்மனைப்பூண்டு – Sida acuta – MALVACEAE

இரத்தப் பெருக்கினைக் கட்டுப்படுத்தி காயம் விரைவாக் ஆறுவதற்கு இதன் இலையை நன்கு கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிதலும், எதிர்பாராமல் உடலில் சேர்ந்த நஞ்சினை முறிப்பதற்கு இதன் இலையுடன் சமஅளவான குப்பைமேனி இலை, 2 பூண்டுப்பல் மற்றும் 3 மிளகு என்பன சேர்த்து அரைத்து புன்னைக்காய் அளவு உட்கொள்தலும்; முக்கிய பங்காற்றுகின்றன.

அறுகம்புல் – Cynodon dactylon – POACEAE

கண்புகைத்தல் தீருவுதற்கு அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றினை கண்ணுக்குப் பிழிதலும், இரத்த மூலத்திலிலுந்து குணம்பெறுவதற்கு 30 கிராம் அறுகம்புல்லை அரைத்து பாலில் கலந்து பருகுதலும், உடல் தளர்ச்சி நீங்கி உறுதியானதும் வலுவானதுமான உடலினைப் பெறுவதற்கு 30 கிராம் புல்லை நன்றாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் வரை சாப்பிட்டு வருதலும் குறிப்பிடடுக் கூறக் கூடிய மருந்தாக உள்ளது.

ஆடாதோடை – Adathonavasica – ACANTHACEAE

மார்ச்சளி, இருமல் மற்றும் காசம் ஆகிய நோய்கள் நலமாகவும் குரல் இனிமை பெறவும் ஆடாதோடையுடன் 1 தேக்கரண்டி மணப்பாகு கலந்து சாப்பிடுதல் வேண்டும். மேலும், வீக்கம் மற்றும் கீல்பிடிப்பு போன்றன குணம் பெறுவதற்கு ஆடாதோடை இலையின் அளவிற்கு எட்டு பங்கு தண்ணீர்; சேர்த்து அதன் அளவு எட்டில் ஒன்றாகக் குறையும் வரையில் நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதனை வடிகட்டி பெறப்படும் குடிநீரை சீலையில் தோய்த்து ஒற்றடம் இடும்போது வீக்கம் தணியும்.

ஆடுதீண்டாப்பாளை – Aristolochia bracteolate – ARISTOLOCHIACEAE

குடலிலுள்ள நுண்புழுக்களை அழிப்பதற்கு 10 கிராம் அளவு உலர்ந்த இலையினை ¼ படி வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நன்கு வடிகட்டி 15 மி.லி. – 30 மி.லி. வீதம் உள்ளெடுத்தலும், கொடிய பாம்பு தீண்டிய விசத்தினை முறிப்பதற்கு இதன் வேரை நன்கு அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளெடுத்தலும், கரும்படை, கரப்பான் போன்ற வியாதிகள் குணமாகுவதற்கு இதன் இலையின் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு எரித்து பக்குவமாக்கி சன்கு வடிகட்டி பூசுதலும் சிறப்பான மருந்துகளாக உள்ளன.

ஆமணக்கு – Ricinus communnis – EUPHORBIACEAE

பொதுவாக தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பதற்கு ஆமணக்கு இலையில் விளக்கெண்ணெய் தடவி அதனை நெருப்பில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டுவர். இதனைவிட, கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் அதன் மூலம் ஏற்படும் வலி நீங்குவதற்கு ஒரிரு துளி விளக்கெண்ணெயயினை; கண்ணில் விடுவர். இதேபோல, மாதவிடாய் காரணமாக ஏற்படும் வயிற்று வலியிலிருந்து குணம்பெறுவதற்கு ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டுதல் வேண்டும்.

ஆல் – Ficus benghalensis – MORACEAE

கரப்பான் வியாதியிலிருந்து குணம் பெறுவதற்கு ஆலம்பழுப்பு இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து பூசுதல் வேண்டும். மேலும், ஆலம்பட்டையினை நன்கு இடித்து அதனை விட 10 மடங்கு அதிகமான அளவு தண்ணீர் விட்டு குடிநீராக்கி, அதனைக் கொண்டு வாய் கொப்புளித்து வரும்போது வாய்ப்புண் மற்றும் ஈற்றுப்புண் என்பன நீங்கும்.

ஆவாரை – Cassia auriculata – CAESALPINIACEAE

மேகவெட்டை மற்றும் உடல்சூடு என்பன நீங்குவதற்கு பூவின் சூரணத்தையோ அல்லது பூவையோ குடிநீராக்கி அதனை பாலில் கலந்து தினமும் குடித்து வருதல் வேண்டும். மேலும், ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை மற்றும் வேர் என இவ் ஐந்தினையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குடிநீரைக் குடித்து வரும் போது நீரிழிவு நோய் நீங்கும்.

ஆனை நெருஞ்சில் – Pedalium murex – PEDALIACEAE

ஆனை நெஞ்சில் இலையினை அரைத்துப் காயத்தின் மீது பற்று போடும் போது காயங்கள் ஆறுவதுடன், இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறுவதுடன், இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வரும் போது வெள்ளை, நீர்க்கடுப்பு மற்றும் சொட்டு மூத்திரம் என்பவையும் நீங்கும்.

இலந்தை – Ziziphus mauritiana – RAMNACEAE

ஒரு பிடி இலந்தை இலையினை, 6 மிளகு மற்றும் 4 பூண்டுடன் சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரும் போது கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலட்டுத் தன்மை நீங்குவதுடன், பச்சை இலையை அரைத்து அதனுடன் சிறிய எலுமிச்சாங்காய் அளவுள்ள புளித்த மோரில் கலந்து பருகும் போது எருவாய்க் கடுப்பும் நீங்கும்.

இலவு – Ceiba pentandra – BOMBACACEAE

இதன் இலையை அரைத்து பசும்பாலில் கலந்து பருகும் போது சிறுநீர் எரிச்சல் நீங்குவதுடன், இதன் பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. காலை மாலை குடிக்கச் செய்ய மலச்சிக்கல், நீர்க்கட்டு நீங்கும்.

இலுப்பை – Madhuca longifolia – SAPOTACEAE

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரும்போது தாய்ப்பால் சுரக்கும் தன்மை அதிகரிப்பதோடு, இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுகாட்டி தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்கும் போது இடுப்பு வலியும் குணமாகும். மேலம், 10 கிராம் இலுப்பம் பூவை 200 மி.லி. பாலில் இட்டு நன்கு காய்ச்சி தூய பாத்திரம் ஒன்றில் வடிகட்டி குடித்து வரும் போது உடலிலுள்ள தாதுக்களின் அளவும் அதிகரிக்கும்.

இம்பூறல் – Oldenlandia umbellate – RUBIACEAE

உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை எரிச்சல் நீங்குவதற்கு இம்பூறல் இலைச்சாற்றைத் தடவி வருவதுடன், அதன் வேரை நிழலில் காயவைத்து தூளாக்கி, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து, அதனை தினமும் காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வரும் போது அனைத்து வகையான கப நோய்களும் குணமாகும்.

உசில் – Albizia amara – MMOSACEAE

உடல் குளிர்ச்சியடைவதற்கு உசிலம் இலையினை நன்கு தூளாக்கி தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் குளித்தலும், குழந்தைகளின் அள்ளு மாந்தம் நீங்குவதற்கு இதன் வேர்ப்பட்டை, வெங்காயம் மற்றும் கரியாக்கிய வசம்பு என்பனவற்றை தலா 10 கிராம் எடுத்து, நீரிலிட்டு காய்ச்சி, அதனை குடிநீராக்கி வேளைக்கு 1 முதல் 2 தேக்கரண்டி என 3 வேளை கொடுத்தலும் மிகப்பலனுடையதாக காணப்படுகின்றது.

ஒதியன் – Lannaea coromandelica – ANACARDIACEAE

புண் மற்றும் புரையோடிய புண்களை ஒதியன் மரப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட குடிநீரினால் கழுவும் போது புண்கள் ஆறுவதுடன், ஒதிய மரத்தின் பிசினை நன்கு தூளாக்கி, அதில் 400 மி.கி. உட்கொண்டு வரும் போது இருமல் நோயும் நீங்கும்.

உப்பிலாங்கொடி – Pentatropis capensis – ASCLEPIADACEAE

குழந்தைகளுக்கான மாந்தம், இரத்தக் கழிச்சல் போன்றனவற்றின் போது, இதன் இலையினை நன்கு வதக்கிப் பிழிந்த சாற்றில், 10 மி.லி இனை 10 மி.லி தாய்ப்பாலுடன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும் கொடுத்து வர நீங்குவதுடன், மாந்தத்தினால் வயிறு உப்பிக் காணப்படின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்டுவதன் மூலம் குணம்பெறலாம்.

ஊசித்தகரை – Cassia tora – CAESALPINIACEAE

பொதுவாக குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் காய்ச்சலின் போது, ஊசித்தகரை இலையினை நீரிலிட்டு நன்கு காய்ச்சி 10 மி.லி வீதம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும் கொடுக்க காள்ச்சல் குறைவதுடன், இதன் விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவிவரும் போது படை, சிரங்கு மற்றும் நீண்ட காலமாக ஆறாத புண்கள்; போன்றன குணமடையும்.

எருக்கு – Calotropis gigantean – ASCLEPIADACEAE

உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு எருக்கு இலையை நன்கு வதக்கி கட்டினால், அவை அவை பழுத்து உடைவதுடன், ஒரு பங்கு எருக்கம் பூ மற்றும் ஒரு பங்கு மிளகு என்பனவற்றுடன் அரை பங்கு கிராம்பு சேர்த்து, அதனை மிளகு அளவிற்கு உருட்டிக் கொடுத்து வரும் போது கடின இரைப்பு உடனே குறைவடையும்.

எழுத்தாணிப்பூண்டு – Launaea sarmentosa – COMPOSITAE

சொறி மற்றும் சிரங்கு போன்றனவற்றிற்கு எழுத்தாணிப்பூண்டு இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவுவதுடன், 5 கிராம் எழுத்தாணிப்பூண்டு வேரினை பாலில் அரைத்து கலக்கி, நன்கு வடிகட்டி தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும் உட்கொண்டு வரும் போது மார்பகம் வளர்ச்சி அடையும்.

ஓமவல்லி – Coleus aromaticus – LABIATAE

ஓமவல்லி இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுத்து வரும் போது குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் மற்றும் தொண்டைச் சதை வளர்ச்சி குணமடைவதுடன், இதன் இலைச்சாறுடன், சர்க்கரை மற்றும் நல்லெண்ணெய் ஆகியனவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்று போடுவதன் மூலம் தலைவலியும் குணமாகும். மேலும், கரும்படை மற்றும் கரப்பான் போன்ற நோய்களின் போது, இதன் இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து எரித்துப் பக்குவமாக்கி, நன்கு வடிகட்டி பூசுதல் வேண்டும்.

ஓரிதழ் தாமரை – lonidum suffruticosum – VIOLACEAE

தாது இழப்பு, வெட்டைச்சூடு மற்றும் பலவீனம் போன்றனவற்றின் போது, இதன் இலையை தொடர்ச்சியாக 40 நாட்கள் நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று, பின்னர் பால் அருந்தி வருதல் நல்ல பலனளிப்பதோடு, இதன் இலை, கீழாநெல்லி இலை மற்றும் யானை நெருஞ்சில் இவை மூன்றையும் ஒரு பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்சியாக சாப்பிட்டு வரும்போது நீர்த்தாரை புண் மற்றும் வெள்ளை ஒழுக்கு ஆகியன குணமடையும்.

கண்டங்கத்திரி – Solanum xanthocarpum – SOLONACEAE

இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி நீங்குவதுடன், கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடித்து வரும் போது உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல் மற்றும் இரைப்பு என்பனவும் நீங்கும்.

கரிசாலை – Eclipta prostrate – ASTERACEAE

கரிசாலை மற்றும் பூக்காத கொட்டைக் கரந்தை போன்றனவற்றின் சூரணம் கலந்து தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும்; அரை தேக்கரண்டி தேனில் கலந்து உட்கொண்டு வரும்போது இளவயதில் தோன்றும் நரை குணமடைவதுடன், மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உட்கொண்டு வரும்போது உடல் பொன்நிறம் பெறுவதுடன், அறிவுத்தெளிவும் பெறும்.

ஊமத்தை – Datura metel – SOLANACEAE

வாதவலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியனவற்றின் போது இதன் இலையை நல்லெண்ணெயில் நன்கு வதக்கிக் கட்டுவதுடன், இதன் இலைச்சாறுடன் சம அளவில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விடும் போது சீதளத்தால் ஏற்பட்ட காதுவலி நீங்குவதுடன், இதன் இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட புண் மாறும்.

கருணை – Typhonium trilobatum – ARACEAE

கருணைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு சிற துண்டுகளாக்கி நன்கு காய வைத்து, அதனை தயிரில் மூன்று நாட்கள் ஊற வைத்து, எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து, அதனுடன், பனங்கற்கண்டு சேர்த்துப் பக்குவமாக பிசைந்து நெல்லி அளவு தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும்; 6 மாதம் சாப்பிட்டு வரும் போது குணமாகும்;.

கருவேல் – Acacia nilotica – MIMOSOIDEAE

கருவேலம்பட்டையினால் தயாரிக்கப்பட்ட குடிநீரால் தினமும் வாய்க் கொப்பளித்து வரும் போது வாய்ப்புண், பல்லீறு அழுகல் மற்றும் பல்லாட்டம் ஆகியன குணமடைவதுடன், இதன் இலையை அரைத்துப் நன்கு புண்கள் மீது கட்டும் போது அவை விரைவாக மாறிவிடும்.

கல்யாண் முருங்கை – Erythrina indica – CAESALPINIACEAE

மாதவிடாய்க்கு முன்பும் பின்பும்; ஏற்படம் வயிற்றுவலியினை நீக்குவதற்கு, 30 மி.லி. அளவுடைய இதன் இலைச்சாற்றினை 10 நாட்கள் மட்டும் கொடுத்து வருவதுடன், 10 துளி இலைச்சாறு மற்றும் 10 துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுக்கும் போது வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு மற்றும் கோழை போன்றன நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகரிக்கும்.

கழற்சி – Caesalpinia crista – CAESALPINIACEAE

கொழுந்து இலைகளை விளக்கெண்ணெயில் நன்கு வதக்கி, இளஞ்சூட்டில் கட்டி வரும் போது விரைவீக்கம் மற்றும் விரையழற்சி என்பன குணமடைவதுடன், கழற்சி விதையும் மற்றும் மிளகும் ஆகியன சமமான அளவு தூளாக்கி 4 கிராம் அளவாக தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும் உட்கொண்டு வரும் போது காய்ச்சல் மற்றும் குடல்வலி ஆகியன குணமடையும்.

களா – Carissa spinarum – APOCYNACEAE

களாப் பழத்தை உணவு உண்ட பின்பு சாப்பிட்டு வரும் போது உணவு விரைவில் சமிபாடடைவதுடன், தூய்மையான களாப்பூவை நல்லெண்ணெயில் இட்டு பூ மிதக்கும் வரை அதனை நன்கு வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வரும் போது கண்ணிலுள்ள படலங்கள் நீஞ்கும்.

கறிவேம்பு – Murraya koenigii – RUTACEAE

கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரை கலந்து தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளும் ஒரு தேக்கரண்டி உட்கொண்டு வரும் போது நீர்க்கோவை மற்றும் சூதக வாய்வு ஆகியன நீங்குவதுடன், சிறிதளவு இலை மற்றும் மிளகாய் ஆகியனவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி மற்றும் வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் பிடி சோற்றில் நெய் விட்டு பிசைந்து உட்கொண்டு வரும் போது குமட்டல், வாந்தி மற்றும் அசீரணபேதி போன்ற வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

அவுரி – Indigofera tinctoria – PAPILINODEAE

அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம் மற்றும் மிளகு ஆகியனவற்றை சம அளவில்; சேர்த்து சுண்டை அளவு மாத்திரை செய்து தினமும் மூன்றுவேளை கொடுத்து வரும் போது நரம்பு சிலந்தி மற்றும் கீல்வாதம் ஆகியன நீங்குவதுடன், அவுரி இலையைக் கொட்டைப் பாக்களவு அரைத்து 250 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் நன்கு கலக்கி வடிகட்டி மூன்று நாட்களுக்கு அதிகாலையில் கொடுத்து வரும் போது மஞ்சள்காமாலையம் நீங்கும்.

கானாவாழை – Commelina benghalensis – COMMELINACEAE

கானாவாழை இலையைக் கசக்கி முகப்பருவிற்கு பூசும் போது முகப்பரு விரைவில் நீங்குவதுடன், அதன் இலையை அரைத்துக் கட்டி வரும் போது படுக்கைப் புண் மற்றும் மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்கள் என்பனவும் மாறும். மேலும், இதன் இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சோர்த்து எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் போன்றனவற்றிற்கு பூசிவரும் போது விரைவில் குணமடையும்.

கிணற்றுப்பாசான் (அ) வெட்டுக்காயப்பூண்டு – Tridax procumbens –COMPOSITAE

இலையை தண்ணீர் சேர்க்காது அரைத்து வெட்டுக்காயம் சிராய்ப்பு ஆகியவற்றில் பற்று போல போடும் போது சீழ்ப்பிடிக்காமல் சீக்கிரமாக குணமடையும்.

கிரந்தி நாயகம் – Dipteracanthus patulus – ACANTHACEAE

இவ்விலையை அரைத்து நகச்சுற்றுக்குப் பூச அவை குணமடைவதுடன், இதன் இலையை மென்றுத் தின்று வரும் போது தேள மற்றும் பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். மேலும், கடிவாயிலும் இலையை அரைத்துப் பூசலாம்.

கீழாநெல்லி – Phyllanthus amarus – EUPHORBIACEAE

கீழாநெல்லி இலையினை உப்பு சேர்த்து நன்கு அரைத்து, அதனை தடவிக் குளித்து வரும் போது சொறி மற்றும் சிரங்கு நமைச்சல் நீங்குவதுடன், கீழாநெல்லியுடன் சம அளவிலான கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்து, அதனை பசுப்பாலுடன் சேர்த்து தொடர்சியாக 45 நாட்கள் சாப்பிட்டு வரும் போது கல்லீரல் பழுது பாண்டு மற்றும் சோகை நீங்குவதுடன், கீழாநெல்லி இலைச்சாறு மற்றும் பொன்னாங்கண்ணி இலைச்சாறு என்பனவற்றறினை சம அளவில் கலந்து நல்லெண்ணெயுடன் சேர்தது காய்ச்சி தலைமுழுகி வரும் போது பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

குப்பைமேனி – Acalypha indica – EUPHORBIACEAE

குப்பைமேனி சமூலச் சூரணத்துடன் நெய் கலந்து தினமும் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வரும் போது பவுத்திர நோய் நீங்குவதுடன், குப்பைமேனி இலையுடன் சிறிதளவான மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்து, குளித்து வரும் பேது தோல் சார் நோய்கள் நீங்கும்.

குமரி (அ) சோற்றுக் கற்றாழை – Aloe vera – LILIACEAE

சகல விதமான பெண்ணின் கருப்பைக் குற்றங்களிற்கும் நன்மருந்தாகிய சோற்றை, 10 முறை நீரில் நன்கு கழுவி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது வயிற்றுப்புண், உடல்சூடு மற்றும் மூலம் தணிவதுடன், 100 கிராம் அளவுள்ள கற்றாழை சோற்றினை 100 கிராம் அளவுள்ள பனைவெல்லம் மற்றும் 25 கிராம் அளவுள்ள வெள்ளைப்பூண்டுடன் கலந்து, பனைவெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வடிகட்டி, அதனுடன் கற்றாழை சோறு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறிப் பாகு பதம் வந்ததும், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கிளறிப் பத்திரப்படுத்தி, அதனை தினமும் காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டு வரும் போது உடல்சூடு தணிந்து வெள்ளை வெட்டை நீங்கி குழந்தைப்பேறு கிட்டுவதுடன், வயிற்றுப்புண் மற்றும் மூலம் குணமடையும்.

கொட்டைக்கரந்தை – Sphaeranthus indicus – COMPOSITAE

கொட்டைக் கரந்தை சூரணத்துடன் கரிசலாங்கண்ணி சூரணத்தினை சம அளவில் கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரும் போது இளநரை நீங்குவதுடன், 5 கிராம் கொட்டைக் கரந்தை தூளுடன், சிறியளவான கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டு வரும் போது வெள்ளை நீங்குவதுடன், தொடர்சியாக நீண்ட காலம் சாப்பிட்டு வரும் போது மூளை, இருதயம் மற்றும் நரம்பு ஆகியன பலப்படுவதுடன், கரப்பானும் குணமாடையும்.

கோவை – Coccina grandis – CUCURBITACEAE

ஒரு பிடி கோவை இலையை 200 மி.லி. நீரில் நன்கு சிதைத்துப் போட்டு, அது 100 மி.லியாக வரும் வரை நன்கு காய்ச்சி அதனை தினமும் காலை, மாலை குடித்து வரும் போது உடல்சூடு மற்றும் கண்ணெரிச்சல் ஆகியன நீங்குவதுடன், இரண்டு பச்சைக் காயை தினமும் சாப்பிட்டு வரும் போது மது மேக நோயும் நீங்கும்.

கோபுரந்தாங்கி – Indoneesiela echioides – ACANTHACEAE

கோபுரந்தாங்கி இலைச்சாறுடன் சம அளவிலான நல்லெண்ணெய் கலந்து நன்கு பதமுறக் காய்ச்சி, அதனை தலை முழுகி வரும் போது தலைமயிர் உதிர்தல் கறைவதுடன், அதன் வேரை நன்கு காயவைத்து தூளாக்கி சம அளவிலான கற்கண்டு தூள் கலந்து தினமும் காலை, மாலை அரை தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வரும் போது எலும்பு, நரம்பு மற்றும் தசை ஆகியன வலுவடையும்.

சத்திச்சாரனை – Trianthema decandra – AIZOACEAE

சத்திச்சாரனை இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டி வரும் போது சகலவிதமான கண்ணோய்களும் நீங்குவதுடன், இதன் இலையை நெய்விட்டு நன்கு வதக்கிக் கீரையாகப் பக்குவப்படுத்தி சாப்பிட்டு வரும் போது பசியின்மை, வயிற்றுளைச்சல் மற்றும் வயிற்றுவலி ஆகியன நீங்கும்.

சரக்கொன்றை – Cassia fistula – CAESALPINIACEAE

சரக்கொன்றை பூவை நன்கு வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கலும் அகலுவதுடன், சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சம அளவில் கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்தி வரும் போது மலச்சிக்கல் நீங்கும்.

சிற்றாமுட்டி – Pavonia zeylaica – MALVACEAE

தாதுக்களின் எரிச்சலைத் தணிக்கும் அருமருந்தாகிய சிற்றாமுட்டி வேரில் 10 கிராமை 100 மி.லி தண்ணீரில் இட்டு, அது 25 மி.லியாக வரும் வரை நன்கு காய்ச்சி, அதில் 2 சிட்டிகை திரிகடுகு சூரணம் சேர்த்து தினமும் காலை, மாலை என தொடர்சியாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வரும் போது காய்ச்சல் குணமடையும்.

சிவனார்வேம்பு – Indigofera aspalathoides – PAPILIONOIDEAE

சிவனார்வேம்பு இலையை நன்கு அரைத்துப் பற்று போடும் போது கட்டிகள் உடையும் அல்லது அமுங்கி விடுவதுடன், இச்செடியை நன்கு சுட்டு சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வரும் போது சொறி மற்றும் சிரங்கு ஆகியனவும் குணமடையும்.

சிறுநெருஞ்சில் – Tribulus terrestris – ZYGOPHYLLACEAE

30 மி.லி சமூலசாற்றுடன் மோர் அல்லது பால் சேர்த்து பருகி வரும் போது சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடைவதுடன், நெருஞ்சில் விதையைப் பாலில் சேர்த்து நன்கு வேக வைத்து, பின்னர் அதனை நன்கு காயவைத்து தூளாக்கி அதனை தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரும் போது தாது கட்டும். மேலும், இதனை இளநீரில் கலந்து சாப்பிட்டு வரும் போது கல்லடைப்பு மற்றும் நீர்க்கட்டு ஆகியன குணமடையும்.

சிறுகண்பீளை – Aerva lanata – AMARANTHACEAE

சமூலத்தை நீரிலிட்டுக் குடிநீர் தயாரித்து, அதனை தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரும் போது சிறுநீரக கற்கள் கரைவதுடன், 50 மி.லி அளவான சிறுபீளைச்சாற்றினை தினமும் காலை, மாலை குடித்து வரும் போது சூதகவலியும் நீங்கும்.

சீந்தில் – Tinospora cordifolia – MENISPRMACEAE

முதிர்ந்த சீந்தில் கொடிகளை நன்கு காளவைத்து தூளாக்கி, அதனை தினமும் காலை, மாலை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் போது உடல் உரம் பெறுவதுடன், பனங்கற்கண்டுடன் சோத்து சாப்பிட்டு வரும் போது மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகு தாகம் மற்றும் உடல் மெலிவு ஆகியன நீங்கும்.

சீமை அகத்தி – Cassia alata – CAESALPINIACEAE

சீமை அகத்தி இலையை எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து அரைத்துப் பற்று போடும் போது கரப்பான், புண் மற்றும் புரைகள் குணமடைவதுடன், இவவிலையை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலை, மதியம், இரவு என சாப்பிட்டு வரும் போது வண்டுக்கடி மற்றும் அரிப்பு ஆகியன நீங்கும்.

சுண்டை – Solanum torvum – SOLANACEAE

சுண்டை வற்றலைக் குழம்பாக்கி சாப்பிட்டு வரும் போது ஏப்பம் வயிறு ஊதுதல் மற்றும் வயிற்றுவலி ஆகியன நீங்குவதுடன், சுண்டைக்காயை விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கி உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போன்றன சேர்த்து நன்கு வறுத்து தூளாக்கி உணவுடன் சாப்படிட்டு வருவதன் மூலம் சமிபாடடையாமை நீங்கும்.

செம்பரத்தை – Hibiscus esculentes – MALVACEAE

செம்பரத்தை பூவை நீரில் நன்கு ஊற வைத்து தினமும் வேளைக்கு 30 மி.லி. பருகி வரும் போது சிறுநீர் நோய்கள் நீங்கி, உடல் குளிர்ச்சியடைவதுடன், உயரளவான குருதி அழுத்த நோயுள்ளவர்கள் இதன் இதழ்களை தினமும் சாப்பிட்டு வரும் போது குருதி சுற்றோட்டம் சீராக அமையும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus racemosa – LILIACEAE

தண்ணீர்விட்டான் கிழங்கு இலைச்சாறுடன் சம அளவிலான பால் சேர்த்து பருகி வரும் போது உடல் வெப்பம் தணிவதுடன், இக்கிழங்கை தூயாக்கி தேனில் அல்லது பாலில் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வரும் போது உடல் உரமாகும்.

தழுதாழை – Clerodendrum phlomoides – VERBENACEAE

தழுதாழை இலையை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் குளித்து வரும் போது வாதவலி அனைத்தும் நீங்குவதுடன், இதன் இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்சும் போது மண்டைக் குடைச்சல் மற்றும் மூக்கு நீர் பாய்தல் ஆகியனவும் குறைவடையும்.

திருநீற்றுப்பச்சிலை – Ocimum basilicum – LAMIACEAE

திருநீற்றுப்பச்சிலையை நன்கு அரைத்துப் பூசும் போது கட்டி மறைவதுடன், இதன் இலையை முகர்வதன் மூலம் தலைவலி மற்றும் தூக்கமின்மை ஆகியனவும் குறையும்.

துத்தி – Abutilon indicum – MALVACEAE

துத்தி இலையை விளக்கெண்ணெயில் நன்கு வதக்கி, இளஞ்சூட்டில் கட்டி வரும் போது இரத்த மூலம் மற்றும் சீழ்மூலம் ஆகியன நீங்குவதுடன், துத்தி பூவின் சூரணத்துடன் சம அளவில் சர்க்கரை சேர்த்து, தினமும் அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் சேர்த்து சாப்பிட்டு வரும் போது காசம் மற்றும் நுரையீரல் கபம் ஆகியன நீங்கும்.

தும்பை – Leucas aspera – LABIATAE

தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகி வரும் போது தலைப்பாரம் மற்றும் நீரேற்றம் நீங்குவதுடன், தும்பை இலையை நன்கு அரைத்துத் தடவி குளித்து வரும் போது நமைச்சல், சொறி மற்றும் சிரங்கு ஆகியனவும் நீங்கும்.

துளசி – Ocimum sanctum – LABIATAE

துளசி இலைகளைப் பிட்டவியலாய் அவித்து நன்கு பிழிந்த, அச்சாற்றினை 5 மி.லி அளவு தினமும் காலை, மாலை பருகி வரும் அபாது பசி அதிகரிப்பதுடன், 50 கிராம் துளசசியுடன் 20 கிராம் மிளகு சேர்த்து மையாய் அரைத்து பயறு அளவு மாத்திரையாக்கி தினமும் காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் சாப்பிட்டு வரும் போது சகலவிதமான காய்ச்சலும் குணமாகும்.

தூதுவேளை – Solanum trilobatum – SOLANACEAE

தூதுவேளை இலைச்சாற்றை சம அளவு நெய்யில் இட்டு நன்கு காய்ச்சி தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரும் போது மார்புச் சளி நீங்குவதுடன், 10 கிராம் பூவை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி தொடர்சியாக 40 நாட்கள் தினமும் பருகி வரும் போது உடல் பலமடையும்.

தொட்டால்சிணுங்கி – Mimosa pudica – MIMOSACEAE

தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து பற்றுப் போடுவதன் மூலம் விரைவீக்கம், மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியன நீங்குவதுடன், இதன் இலையை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து அரை மணி நேரம் கழித்து நன்கு வடிகட்டி நாள்தோறும மூன்றுவேளை சாப்பிட்டு வரும் போது சிறுநீரகக் கற்கள் கரையும்.

தேள்கொடுக்கு – Heliotropium indium – BORAGINACEAE

தேள்கொடுக்கு இலையை நன்கு கசக்கி தேள் கொட்டின இடத்தில் தேய்க்கும் போது நஞ்சு இறங்கி, கடுப்பு தணிவதுடன், இதன் இலைச்சாற்றுடன் சம அளவில் நல்லெண்ணெய் கலந்து பதமுறக்காய்ச்சி வடித்து காதுகளில் விட்டுவரும் போது காதடைப்பு நீங்கும்.

நஞ்சறுப்பான் – Tylophora indica – ASCLEPIADACEAE

நஞ்சறுப்பான் இலையை நன்கு காயவைத்து தூளாக்கி 1 அல்லது 2 கிராம் வெந்நீரில் கலந்து தினமும் மூன்று வேளையாக சாப்பிட்டு வரும் போது வியர்வை பெருகுவதுடன், இதன் இலையை நன்கு அரைத்து எலுமிச்சங்காயளவு உள்ளுக்குக் கொடுத்து கடிவாயினும் வைத்துக் கட்டி வரும் போது வாந்தியாகி எல்லாவித நஞ்சும் முறிவடையும்.

நத்தைச்சூரி – Hispida spermacoce – RUBIACEAE

10 கிராம் வேரைப் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரும் போது தாய்ப்பால் பெருகுவதுடன், 20 கிராம் வேரை நன்கு சிதைத்து குடிநீராக்கி 200 மி.லியாக நாளொன்றுக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வரும் போது உடம்பிலுள்ள சகல விதமான நோயும் படிப்படியாகக் குறையும்.

நந்தியாவட்டம் – Taebermontana divaricate – APOCYNACEAE

கண் வலியுடையோர் இதன் பூக்களை கண்ணில் வைத்து ஒரு துணியால் இலகுவாகக் கட்டி உறங்கி வரும் போது கண் வலி, கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு என்பன மாறுவதுடன், இதன் பூவால் ஒற்றடம் கொடுக்கும் போது கண் எரிச்சல் நீங்கும். மேலும், இதன் வேரை நன்கு மென்றுத் துப்பும் போது பல்வலி நீங்கும்.

நல்வேளை (அ) தைவேளை – Cleome gynandra – CAPPARACEAE

நல்வேளை இலைச்சாற்றில் ஒரு துளியினைக் காதில் விடும் போது சீழ் வருதல் கட்டுப்படுத்தப்படுவதுடன், இவ்இலையை நன்கு அரைத்து பற்றுப் போடும் Nபுhது சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து குணமாகும். மேலும், இதன் இலைகளை நன்கு அரைத்துச் சாறு பிழிந்து, சக்கையை தலையில் வைத்துக் கட்டி வரும் போது தலைபாரம் நீங்கும்.

நன்னாரி – Hemidesmus indicus – ASCLEPIADACEAE

5 கிராம் பச்சை நன்னாரிவேரினை நன்கு அரைத்து 200 மி.லி. பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் போது மூலச்சூடு, மேக அனல் மற்றும் நீர்ச்சுருக்கு ஆகியன நீங்குவதுடன், 20 கிராம் வேரை அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் நன்கு காய்ச்சி தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரும் பாது நாட்பட்ட வாதம் மற்றும் பாரிச வாதம் ஆகியனவும் குணமடையம். மேலும், நன்னாரி மணப்பாகானது கோடை கால வெயிலுக்கு ஏற்ற ஒரு குளிர்ச்சியான பானம் ஆகும்.

நாகமல்லி – Rhinacanthus nasuta – ACANTHACEAE

நாகமல்லி இலை அல்லது வேரை மென்று தின்று வரும் போது பாம்புக்கடி நஞ்சு நீங்குவதுடன், இதன் இலை அல்லது வேரை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பற்றுப் போடும் போது சொறி மற்றும் கரப்பான் ஆகியனவும் நீங்கும்.

நாயுருவி – Achyranthes aspera – AMARANTHACEAE

துத்திக் கீரையை நன்கு வதக்கி, 20 கிராம் நாயுருவி விதை சூரணத்துடன் கலந்து உணவில் சேர்த்து உண்ணுவதன் மூலம் அனைத்தும் தீருவதுடன், நாயுருவி வேரால் பல்துலக்கம் போது பல் தூய்மையடையும்.

நாய்த்துளசி – Ocimum canum – LABIATAE

நாய்த்துளசி இலையை நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து தினமு; காலை, மாலை சாப்பிட்டு வரும் போது மூலச்சூடு மற்றும் கணச்சூடு ஆகியன நீங்குவதுடன், இதன் இலையை நன்கு அரைத்துத் தடவிக் குளித்து வரும் போது சொறி மற்றும் சிரங்கு ஆகியன குணமடையும்.

நாய்வேளை – Cleome viscosa – CAPPARACEAE

நாய்வேளை இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி நன்கு வடித்துக் காதில் விட்டு வரும் போது சீழ்வடிதல் நீங்குவதுடன், நாய்வேளை இலையைப் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வரும் போது வயிற்று வாயுவு அகன்று பசி அதிகரிக்கும்.

நித்யகல்யாணி – Catharanthus roseus – APOCYNACEAE

ஆறு நித்யகல்யாணி பூவை அரைலிட்டர் தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கால் லிட்டராக வற்ற வைத்து தினமும் நான்கு வேளை கொடுத்து வரும் போது அதிதாகம், அதி மூத்திரம், மிகுபசி மற்றும் உடல் பலவீனம் ஆகியன நீங்குவதுடன், இதன் இலைகளை தேங்காய் எண்ணெயிலிட்டு நன்கு வெயிலில் உலர்த்தி, அதனை கை, கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம்.

நிலப்பனை – Coruligo orchoides – HYPOZYDACEAE

நிலப்பனை கிழங்கின் தோல் மற்றும் நரம்பு ஆகியனவற்றை நீக்கி, நன்கு காயவைத்து தூளாக்கி 5 கிராம் அளவுக்கு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரும் போது இடுப்புவலி நீங்குவதுடன், அரைதேக்கரண்டி நிலப்பனைக் கிழங்கு தூளை 200 மி.லி பாலில் சேர்த்துச் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு வேளை பருகி வரும் போது வெள்ளை மற்றும் வெட்டை ஆகியன நீங்கும்.

நிலவேம்பு – Andrographis paniculata – ACANTHACEAE

நிலவேம்பு காய்ச்சலை போக்கி நல்ல பசியைக் கொடுக்கக் கூடியது. கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் நன்கு காய்ச்சிக் குடிநீர் தயாரித்து குடித்து வரும் போது சகல விதமான காய்ச்சல்களும் குணமடையும்.

நிலாவாரை – Cassia senna – CAESALPINIACEAE – Nilavarai Mooligai

நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு மற்றும் படை மீது தடவி வரும்போது அவை குணமடைவதுடன், நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் சாப்பிட்டு வரும் போது மலசிக்கல் நீங்கும்.

நீர்ப்பிரமி – Bacopa monnieri – SCHROPHULARIACEAE – Neer Pirami Mooligai

நீர்பிரமி இலையை நன்கு வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வரும் போது சளி மிகுதியால் வரும் இருமல் குணமடைவதுடன், இதன் இலையை நன்கு அரைத்துப் பற்றுப்போடும் போது வீக்கம் குறைவடையும். மேலும், இதன் இலைச் சாற்றுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி ஒரு தேக்கரண்டி குடித்தல் நல்லம்.

மூலிகை (Mooligai), மூலிகை மருத்துவம், மூலிகை வகைகள், மூலிகை பயன்கள், மூலிகை பெயர்கள், Mooligai in Tamil. Mooligai Payangal, 1008 mooligai, siddha mooligai, siddhar mooligai, iyarkai mooligai maruthuvam, mooligai maruthuvam, mooligai vaithiyam, mooligai vagaigal in tamil,mooligai names, mooligai sedigal list, mooligai thavaram, mooligai in tamil, mooligai names, moolikai maruthuva payangal மூலிகை செடிகள் பெயர்கள், மூலிகை தாவரங்கள் பயன்கள், பயன் தரும் மூலிகைகள், மூலிகைகள் பட்டியல், மூலிகை பொடி.

மேலும் வாசிக்க: Millet Benefits சிறுதானிய பயன்கள்

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 29.07.2020 Today Rasi Palan 29-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article30-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 30-07-2020 Today News in Tamil – Tamil News Live