ஆயுள், அழகு பெறுக 48 நாட்கள் தேனில் ஊறிய இஞ்சி முன்னோரின் நாட்டு வைத்தியம்!

0

ஆயுள், அழகு பெறுக 48 நாட்கள் தேனில் ஊறிய இஞ்சி முன்னோரின் நாட்டு வைத்தியம்.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! அத்துடன் ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது, இஞ்சியை ரசாயன முறைப்படி சாறு பிழிந்து, அதை மதுசாரத்துடன் கலந்து, ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து, அதை மிக்சர்களில் கலந்து செரிமாணத்துக்கு கொடுக்கின்றனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு, அரை அவுன்ஸ் வீதம் கொடுத்துவர, ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் நீங்கும். இந்த முறையில், வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

இஞ்சியை சுத்தம் செய்து, மேல்தோலை சீவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு, சுத்தமான தேன் 150 கிராம் விட்டு, அதனை, நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து, 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டு விடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும், அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே! இஞ்சி முறபா

மேலும் பல நன்மைகள்…

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து, சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து, இரைப்பு நோய் தொல்லை வரும்போது, மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 3, மிளகு 10 இவைகளை நசுக்கி, இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாக சுண்ட வைத்து, வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாச காசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும், இந்தக் கஷாயத்தை காலை மாலை என நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும், மிளகு 10 மட்டும்தான்; எடை கணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர், 20 கிராம் கற்கண்டு தூள் சேர்த்து, அதனுடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து, அரைக்கால் படி பசும்பாலில் கலந்து, காலையில் சாப்பிட்டு வர, பித்த ரோகங்கள், பித்தம் சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவது நிற்கும். எரி குன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல், வாய்வு குடைச்சல், வலிகளும் நீங்கும் சந்தேகமில்லை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்! இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் உள்ளதா!
Next articleஉடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற காலையில ஒரு டம்ளர் சீரக பானம்!