ஐந்தே நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தை போக்க இலகுவான வழிகள்!
‘ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோயாக இல்லாவிடினும் எமது பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இது வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். எனினும் சில வேளைகளில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். இத்தகைய வாய் துர்நாற்றத்தினை நீங்குவதற்கு ஆயுர்வேதத்தில் அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான சில காரணங்கள்
• வாய் சுத்தமின்மை மற்றும் சமிபாட்டுக் கோளாறுகள்
• புகையிலை பொருட்களை பயன்படுத்துதல்
• வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்களை அதிகளவில் உட்கொள்ளுதல்
• சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுதல்
• தொடர்ச்சியாக வாய் உலர்ந்து போதல்
• மூக்கு, சைனஸ் அல்லது தொண்டையில் ஏற்படும் நோய் தொற்றுகள்
• ஈறுகளில் தோன்றும் நோயகள்;
• வாயில் ஏற்படும் கிருமி தொற்றுகள்
• பிற வளர்சிதை மாற்றங்கள், புநுசுனு, அரிதாக சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள்
வாய் துர்நாற்றத்தினைப் போக்குவதற்கான சில ஆயுர்வேதத் தீர்வுகள்
மோசமான சமிபாட்டு சக்தியினால் பக்டீரியாக்கள் உடலிலும் வாயிலும் பெருகுவதனால்; வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும். சில மூலிகைகளையும் சில எளிமையான வீட்டு குறிப்புகளையும் பின்பற்றி அதன் மூலம் பிரச்சினையை மேலோட்டமாக மூடி மறைக்காமல் வாய்துர்நாற்றத்தை வேரிலிந்து சரி செய்து கொள்ள ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.
• புதினா இலைகள்
வாய் துர்நாற்றம் நீங்க அருமையான மூலிகை புதினா. புத்துணர்ச்சியான சில புதினா இலைகளை மென்று தின்னும் போது அது வாயில் உள்ள வாய் துர்நாற்றம் அளிக்கும் பேக்டீரியாவை அழிப்பதுடன், அதன் இலைகளில் உள்ள பச்சையம் இயற்கையான மவுத் ஃப்ரெஷனராக வேலை செய்வதுடன், புதினாவின் நறுமணம் வாய்க்கு புத்துணர்ச்சியளிக்கும்.
• த்ரிபலா
ஆயுர்வேதம் மூலம் நமக்கு கிடைத்துள்ள அரிய முத்தாகிய த்ரிபலா வாய் துர்நாற்றத்தை நீக்குவதுடன் சமிபாட்டு உறுப்புகளை சீராக்கி கழிவுகளை நீக்குகிறது,” என டாக்டர். மஹேஷ் டி.எஸ். கூறுகின்றார்.
• கிராம்பு
பக்டீரியாவை எதிர்க்கும் குணமுடைய கிராம்பில் சிறிதளவினை வாயில் போட்டு நன்றாக மெல்லும் போது வாயில் உள்ள பக்டீரியாக்களை அழித்து சுவாசத்திற்கு புத்துணர்ச்சியளிக்கிறது. அதன் வலுவான சுவை உங்களுக்கு பிடிக்காவிட்டால் அதற்கு பதிலாக கிராம்பு தேனீர் அல்லது கிராம்பின் நற்குணம் கொண்ட பற்பசைகளை பயன்படுத்தலாம்.
• சோம்பு
ஆன்டி பக்டீரியல் குணமுடைய சோம்பு வாய் துர்நாற்றத்தை எதிர்க்க பயன்படுவதனால் அதனை வெறுமனே மென்றும் தின்னலாம் அல்லது தேனீரில் கலந்து பருகலாம். இவ்வாறு மென்று தின்னும் போது வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பக்டீரியாக்களும் அழிந்து விடும்.
• டீ ட்ரீ ஆயில்
வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பக்டீரியாக்களை நீக்குவதில் பிரசித்தி பெற்ற டீ ட்ரீ ஆயிலின் நற்குணமானது கிருமிகளை கொல்வதில் சிறப்புடன் செயல்படுவதாக பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணெயில் சில சொட்டுக்களை நீரில் ஊற்றி தினமும் வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் வாயை சுத்தமாகவும் வைக்கும்.
வாய் துர்நாற்றம் நீங்க நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
நாக்கை நன்றாக சுத்தம் செயயும் போது நாக்கில் படிந்துள்ள மெல்லிய தகடுகள் நீங்கி நாக்கில் உள்ள கிருமி தொற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
வாயினால் சுவாசித்தல், மது அருந்துதல் மற்றும் புகையிலை உட்கொள்ளுதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
அதிகளவில்; தண்ணீர் குடித்தல் மற்றும் ஃப்ரெஷான காய்கறி மற்றும் பழங்களை உண்ணும் போது மலச்சிக்கல் மற்றும் வாய் துர்நாற்றத்துக்கான முக்கிய காரணிகள் நீங்கும்.
ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது போல நாம் பற்களை காலை எழுந்தவுடன், இரவு உறங்க செல்லும் முன் மற்றும் மதிய உணவு உண்ட பிறகு என ஒரு நாளுக்கு மூன்று முறை (புதினாவின் நற்குணம் கொண்ட டூத் பேஸ்டாக இருந்தால் இன்னும் சிறப்பு) சுத்தம் செய்யும் போது பற்சொத்தைகள் மற்றும் கிருமி தொற்று நீங்கும்.
By: Tamilpiththan