முழங்கால்களுக்கு வலிமையளிக்கும் முழங்கால் மூட்டுக்கள் உடலிலேயே மிகவும் பெரிய மற்றும் சிக்கலான மூட்டுக்களாகவும் தசைநார்களால் இணைக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றதுடன், தசை நார்கள் முழங்கால் எலும்புகளை கால் தசைகளுடன் இணைத்து, முழங்கால் மூட்டுக்களின் அசைவிற்கும், நடக்க, ஓட, நிற்க, குதிக்க என அனத்து செயல்பாட்டிலும் முழங்கால் மூட்டுக்கள் முக்கிய பங்கை வகிக்கிறன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நமது வயது அதிகரிக்கும் போது எமது முழங்கால் மூட்டுக்கள் தேய்மானம் அடைய ஆரம்பித்து கடுமையான முழங்கால் மூட்டு வலியை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறாக, பல காரணங்களினால் எமது முழங்காலின் வலிமை குறைவடைகின்றன.
முழங்கால் மூட்டுக்களில் ஏற்பட்ட காயங்களால் ஏற்படும் வலியின் போது கீழுள்ள பானத்தை குடிப்பதன் மூலம் முழங்கால் தசைநார்கள் வலிமை பெற்று மூட்டு வலி பற்ந்துவிடும்.
உங்களுக்கு அது பானம் என்றும், அதை எவ்வாறு தயாரிப்பது என்றும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
தேவையான பொருட்கள்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
தேன் – 2 1/2 மேசைக்கரண்டி
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
ஓட்ஸ் – 1 கப்
பாதாம் – 2 1/2 மேசைக்கரண்டி;
பட்டைத் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
செய்முறை
முதலில் ஓட்ஸை எப்போதும் போன்று சாதாரணமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவான சுடுநீரை ஊற்றி, பின்னர் அதனை குளிர வைக்கவும். பின்பு அதில் அன்னாசிப் பழசாற்றினை சேர்க்கவும். அடுத்து, அதில் பாதாமை தட்டிப் போடவும். பின்னர்; ஆரஞ்சு ஜூஸ், தேன், தண்ணீர் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பிறகு அதில் ஓட்ஸை சேர்த்து சில நிமிடங்கள் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். பானம் ரெடி
இந்த பானத்தை தொடர்சியாக தினமும் குடித்து வரும் போது எலும்பகளில் நல்ல முன்னேற்றம் தென்படும்.
விசேட குறிப்பு
இந்த பானத்தை நீங்கள் தொடர்ச்சியாக குடித்து வரும்போது, 15 நாட்களில் இதுவரை உங்கள் மூட்டுக்களில் காணப்பட்டு வந்த வலி முற்றிலும் நீங்கி, இனிமேல் முழங்கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படுவதன் மூலம் அன்றாட செயல்பாடுகளில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளும் இல்லாது போகும்;.
By: Tamilpiththan