பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

0

பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

உரிக்க உரிக்க உரிவதுடன், இறுதியில் ஒன்றும் இல்லாத வெறுமையை உணர்த்தும் தத்துவார்த்தமான காயாகிய வெங்காயம், யூனியோ என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து தோன்றிய பெரிய முத்து எனும் பொருள் கொண்ட ஆனியன் என்று அழைக்கப்படும் வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என்பன அதிகளவில் காணப்படுவதனால் உடம்புக்கு ஊட்டச்சத்தினை வழங்குவதுடன், சிறந்த பால் உணர்வுத் தூண்டுவியாகவும் இது செயல்படுகின்றது.

சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே குண நலன்களை கொண்டுள்ளதுடன், எமது அன்றாட சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றதுடன், பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் காய்கறியாக பயிரிப்படுகின்றது. இத்தாவரத்தின் பசுமை இலைகள், செதில் இலைகளால் ஆன குமிழ், தண்டு ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவையாக காணப்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை கொண்ட அல்லிசின் மற்றும் அல்லீன் ஆகியன உள்ளதனால், இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மேலும், ஸ்டிரால்கள், பினோலிக் அமிலம் மற்றும் ஃபிளேவனாய்டுகள் போன்றன காணப்படுகின்றன.

பல்வலி குணமடையும்

வெங்காயச் சாறு சில வகையான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதுடன், இதனை மோரில் விட்டுக் குடித்து வரும் போது இருமல் குறைவடையும். மேலும், வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவரும் போது பல்வலி மற்றும் ஈறுவலி என்பன குறைவடைவதுடன், பல் சொத்தைப்படுதல் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகின்றது.

விஷக் கடிக்கு மருந்து

பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக அதிகளவான வெங்காயத்தை உண்ணும் போது விஷம் இறங்குவதுடன், தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்கும் போது உடனடியாக விஷம் இறங்கும். மேலும், வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாற்றை குடிக்கும் போது நாய் விஷம் உடனடியாக இறங்கும். எனினும் அதன் பின்னர் உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.

இதயநோய் வராமல் தடுக்கும்

வெங்காயத்தில் கிருமிகளுக்கு எதிராக செயற்படுகின்றதுடன், இதயநோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் (சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினைத் தவிர்ப்பதுடன், ரத்த அழுத்தத்தை குறை;த்தல், இழந்த சக்தியை மீட்டல், சளி, இருமலை போக்குதல், மூட்டுவலிக்கு எதிராக செயற்படுதல் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுதல் என பல வித மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

பால் உணர்வை தூண்டும்

பல நூறு ஆண்டுகளாகவே பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டு வருகின்ற வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின்னர் பசும் பால் சாப்பிட்டு வரும் போது ஆண்மை பெருகுவதுடன், வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவரும் போது தாது பலமடையும்.

நரம்புத் தளர்ச்சி குணமடையும்

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

முகப்பரு மறையும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்து வரும் போது முகப்பரு மறையும்.

கண்நோய் குணமடையும்

வெங்காயச் சாற்றோடு சிறிதளவான உப்பு சேர்த்து அடிக்கடி சாப்பிட்டுவரம் போது, மாலைக்கண் நோய் சரியாகுவதுடன், வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவில் கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிடும் போது கண்வலி மற்றும் கண் தளர்ச்சி என்பன நீங்கும்.

காதுவலி நீங்கும்

வெங்காயச் சாற்றினை லேசாக சூடு செய்து காதில் விடும்போது காதுவலி கட்டுப்படுத்தப்படுகின்றதுடன், வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விடும் போது, காது இரைச்சல் நீங்கும்.

பித்தம் குறையும்

தோல் உரித்த நாலைந்து வெங்காயத்தை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரும் போது பித்தம் குறைவடைவதுடன், பித்த ஏப்பமும் நீங்கும். இதனைவிட, மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டும் போது சீரான மாதவிடாய் ஏற்படுவதுடன், இது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

ஏனையவை

குறைவான கொழுப்புச்சத்து கொண்ட வெங்காயத்தினை குண்டானவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக பயன்படுத்த முடியும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதனால் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்த முடியும் என்பதுடன், தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவரும் போது முடிவளரும். மேலும், வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவரும் போது டி.பி.நோய் குறைவடையும்.

நல்ல தூக்கத்தை பெறுவதற்கு பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. மேலும், வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகின்ற அதேவேளை விரைவான சமிபாட்டிற்கும் உதவுகின்றது. மாரடைப்பு நோயாளிகள் மற்றும் இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தைச் சாப்பிடும் போது சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைத்து விடுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை!
Next articleஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது!