நிறைமாத கர்ப்பிணியாக வந்த பெண்! குடும்பக்கட்டுப்பாடு செய்த போது நேர்ந்த கதி! அதிர்ச்சி சம்பவம்!

0

தமிழகத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் குடும்பக்கட்டுபாடு செய்த போது உயிரிழந்ததால், பெற்றோர் தவறான சிகிச்சை காரணமாக இறந்துவிட்டாள் என்று உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளைப் பகுதியை சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான இவர் ஆஷா(29) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆஷா நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த 9 நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆஷாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.

இதையடுத்து கடந்த புதன் கிழமை அஷாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் இல்லாமல் இருந்ததால், செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுயநினைவை இழந்த ஆஷா கடந்த 3 தினங்களாக கோமா நிலையில் இருந்துள்ளார். உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆஷாவை பார்க்க வேண்டும் என்று கூறினால் கூட, மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை திடீரென்று மருத்துவர்கள் ஆஷா உயிரிழந்துவிட்டதாக கூறியதால், ஆஷாவின் தாய் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை வளாகத்தின் முன்பு கதறி அழுதார்.

மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ஆஷாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமஹிந்தவின் கோட்டைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டவர் யார்! பொலிஸார் வெளியிட்ட தகவல்!
Next articleநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள்! இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்குமாம்!