ஜோதிடத்தின் படி 12 ராசிக்காரர்களும் தங்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகளை பெற சில பரிகாரங்கள் !

0

ஜோதிடத்தின் படி 12 ராசிக்காரர்களும் தங்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகளை பெற சில பரிகாரங்கள் ! அனைவரது வாழ்விலும் நன்மைகள் மற்றும் தீமைகள் வருவது அவரவர் செய்யும் செயல்களைப் பொறுத்துதான் அமையும்.

மேஷம்: மேஷ ராசியினர் தங்களின் வாழ்வில் என்றென்றும் நற்பலன்களை பெறுவதற்கு தங்களின் உடன்பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியிலோ உதவுவது சிறந்த பரிகாரமாக இருக்கும். எனவே உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் உதவி செவ்வாய் பகவானின் ஆசிகளை பெற்று தரும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரரரர்கள் வெள்ளிக்கிழமைகள் தோறும் ஏழு வெள்ளை நிற பூக்களை கொண்டு வந்து, ஓடும் ஆற்று நீரில் நின்றவாறு ஓம் சுக்ராயே நமஹ் எனும் மந்திரத்தை 6 முறை துதித்து பின்பு அப்பூக்களை ஆற்று நீரில் விடவேண்டும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் ஒரு அமாவாசை தினத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அன்றிரவு அக்கோவிலிலேயே தங்கி மறுநாள் அங்கிருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் அளித்தால் உங்களின் பாவதோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிகளவு நன்மைகள் ஏற்பட தொடங்கும்.

கடகம்: கடக ராசிகாரர்கள் இளம் பச்சை நிறம் மற்றும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் கைகுட்டைகளை பயன்படுத்தி வருவது உங்களுக்கு ஏற்படவிருக்கும் பாதகங்களை நீக்கி உங்களுக்கு நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த நன்மைகள் ஏற்பட ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை 7 ஆம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் அதிகம் நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பதை விட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சற்று அருகில் இருக்கும் குடியிருப்பில் வசிப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

துலாம்: துலாம் ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நற்பலன்களை பெருவதற்கு வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்று ஈன்ற பசுமாட்டிற்கு அகத்தி கீரை, பழங்கள் போன்றவற்றை உணவாக கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நல்ல பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று படையலிட்டு வழிபட வேண்டும்.

தனுசு: தனுசு ராசியில் வியாழக்கிழமைகள் தோரும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள், இனிப்புகள் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வர வாழ்வில் எப்போதும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் தங்களின் வாழ்நாளில் எப்போதும் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து பெறுவதற்கு செவ்வாய் கிழமைகளில் முருக பெருமானையும், சனி ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் இவர்களின் வாழ்வில் நற்பலன்கள் அதிகம் ஏற்படுவதை காணலாம்.

கும்பம்: கும்ப ராசியில் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எண்ணெய் தீபமேற்றி வழிபட்ட பின்பு, காகங்களுக்கு காலையில் உணவை வாய்த்த பின்பே, காலை உணவை சாப்பிட வேண்டும்.

மீனம்: மீன ராசியினர் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் சித்தர்கள் கோவிலுக்கு பௌர்ணமி தினங்களில் சென்று வழிபட்டு வருவது மீன ராசியினரின் வாழ்வில் பல நாள் மாற்றங்களை ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஐப்பசி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்!
Next articleஇந்த இரு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை வரவே வராது!