திருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்! பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியது என்ன!

0

“ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே” என்று திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் அன்று கொதித்து போய் சொன்னார்கள். அவர்களிடம்தான் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும்போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.

இந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான் என்பதால், கோவை சின்னியம்பாளையத்தில்தான் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமையிலான குழு அங்கு நேற்று மதியத்திலிருந்து சோதனை நடத்தியது.

இந்நிலையில், இன்று திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை. இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.

இது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, “சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்கும். ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம். இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. காலங்காத்தாலே 7 மணிக்கே திருநாவுக்கரசு இங்க சுத்திட்டு இருப்பான்.. இன அவன் இந்த பக்கம் இனி வரட்டும்… நாங்க பார்த்துக்கறோம்” என்று ஏற்கனவே ஆவேசமாக சொல்லி இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் சிபிஐ அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சப்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா’ என, அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.

அதற்கு மக்கள், “கூலி வேலைக்கு போய்ட்டு, இரவில்தான் வீடு திரும்புவோம். யார் வந்தார்கள் என்பதை கண்காணிக்கவில்லை. பெண்கள் சப்தம் கேட்டதில்லை. ஆனா கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக்கிறோம்” என்றனர்.

இனி திருநாவுக்கரசுவின் நடவடிக்கைகள் பற்றி மொத்த விவரத்தையும் அதிகாரிகளிடம் மக்கள் கொட்டி தீர்ப்பார்கள் என்றே தெரிகிறது. நேற்றும், இன்றும் திருநாவுக்கரசை சுற்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்தை நீட்டித்துள்ளதால், அதிர்ச்சி தகவல்கள் பல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅப்பாவி முஸ்லிம் இளைஞனிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நிமிடங்கள்!
Next articleநிகவெரட்டியவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்! பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஆதங்கம்!