ஆண்மை பெறுக, சர்க்கரை நோய் குறைய! அருமையான மருந்து!

0

டெக்னாலஜி வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றம் என்ற பெயரில் மனிதனின் அன்றாட வாழ்க்கைமுறை மிகவும் மாறிவிட்டது. கண்டநேரத்தில் சாப்பிடுவது, கண்டதை சாப்பிடுவதால் தேவை இல்லாத வியாதிகள் மனிதனை தொற்றிக்கொள்கிறது.

இதுபோன்ற வியாதிகளுக்கு மருத்துவமனை சென்று ஆயிர கணக்கில் செலவழிப்பதை விட இயற்கையே நமக்கு தீர்வை தருகிறது.

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் ஓன்று வெந்தய கீரை. இந்த வெந்தய கீரை நம் உடலில் இருக்கும் பல்வேறு வியாதிகளை குணமாக உதவுகிறது.

செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வெந்தய இலைகளை எடுத்துக்கொள்வதால், செரிமானம் மிக சிறப்பாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, புரோட்டின் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இன்று நாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு வியாதி சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தேவையான இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவி செய்கிறது.

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகள் உருவாக்க இந்த வெந்தய கீரை பயன்படுகிறது.

தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் வெந்தய கீரை சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

மலசிக்கல் வாயு தொல்லை, வயிற்றுப்புண் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் மிக விரைவாக நன்றாகி விடும்.

நம் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதே போன்று, ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்கிறது வெந்தய கீரை. வெந்தய கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு இதயநோய் வராமல் தடுக்க முடியும்.

ஆண்மை பிரச்சனைக்கு ஐந்து ரூபாயில் தீர்வு! அதுவும் வீட்டிலையே!

இன்று பல இளம்தம்பதியினரின் விவாகரத்திற்கு காரணமாக இருப்பது ஆண்மை குறைவு, குழந்தை இன்மை போன்ற காரணங்கள்தான்.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் உண்ணும் உணவுகள், நமது அன்றாட வாழ்க்கை முறையும் நமது ஆண்மைக்கு வேட்டுவைக்கும் முக்கிய காரணிகளாக செயல்படுகிறது.

இதை எப்படி சரிசெய்வது? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து கண்டகண்ட பொருட்களை வாங்கி உண்பதை விட வெறும் ஐந்து ரூபாயில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வாழைப்பழம் உங்களுக்கு எளிய தீர்வை வழங்குகிறது.

முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ் கலாசாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தை படைக்கிறோம்.

திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியே இது.

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. இதனால் நீங்கள் அதிக பலம் கொண்டு தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.

விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் எனும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது.

வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

மலச் சிக்கலுக்கு வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.

ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் பற்றி தெரியுமா?
Next articleஅடிக்கடி சின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க !