மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு! இதில் உங்க ராசி இருக்கா!

0

இந்த உலகத்தில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும்? யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது என்பது தான் உண்மை.. ஒரு பேச்சிற்கு வேண்டுமானால், சிலர் எனக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை என்று கூறலாம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. உண்மையான பணக்காரன் யார் என்று பார்க்க போனால், கோடிக் கோடியா சொத்துகளை சேர்த்து வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் கிடையாது. ஏழையாக இருந்தாலும் கூட எவன் ஒருவன் இருப்பது போதும் என்று வாழ்கிறானோ அவனே உண்மையான பணக்காரன்..

ஏனென்றால் ஏழை இருப்பது போதும் என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஆனால் பணக்காரன் இன்னும் தேவை.. தேவை என்று தன் தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறான்.. செல்வந்தனாக வேண்டும் என்றால் கடின உழைப்பும் சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் இருக்கிறதாம்.. அது எந்த ராசிக்காரர்களுக்கு என்பதை காணலாம்.

1. ரிஷப ராசி
20 ஏப்ரல் – 20 மே வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் நன்பகத்தன்மை மிக்கவர்கள் மற்றும் சிறந்த பொறுமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களால் இயலாத காரியங்களை வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்து பார்த்தாக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க கூடியவர்கள்.

உழைப்பாளிகள்
இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள்.. இவர்கள் சம்மாதிக்கும் ஒவ்வொரு பணமும் இவர்களது சொந்த வியர்வை மற்றும் இரத்தத்தால் ஆனது ஆகும். இவர்கள் தங்களது பணத்தை அதிகமாக செலவு செய்பவர்களும் கூட.. ஏனெனில் இவர்கள் செகுசான வாழ்க்கையை வாழ விரும்புவர்கள்.. சிறந்த நிதி நிர்வாக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கவனம்
இவர்களுக்கு தங்களது விரும்பமான மற்றும் பாசத்திற்குரிய நபர்களுக்கு பரிசளிப்பது மிகவும் பிடித்தமானது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் சேமிப்பிலும் சற்று கவனம் காட்ட வேண்டியது அவசியமாகும். இது இவர்களை நல்ல நிலைமைக்கு அழைத்து செல்லும்.

2. கடக ராசி
21 ஜூலை – 22 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை மிகவும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாகவும், அவர்கள் மீது அதிக அக்கறை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது உலகமே இவர்களது குடும்பமாக தான் இருக்கும்.

தேவைகள்
கடக ராசிக்காரர்களுடைய இலக்கு, தனது குடும்பத்தை திருப்திப்படுத்துவதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதுமாக தான் இருக்கும். இவர்கள் தங்களது சொத்து விசயத்தில் கவனமாக இருக்க கூடியவர்கள்..

தவிர்க்கவும்
ஆனால் கடக ராசிக்காரர்கள் தங்களது நிதி நிலை, நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பது குறித்து மற்றவர்களிடத்தில் கண்டிப்பாக ஆலோசனை மேற்க்கொள்வது என்பது கூடாது. அதே சமயத்தில் நீங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தங்களுக்கான சேமிப்பை சேமித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி இவர்கள் தங்களுக்கு தேவையான விசயங்களுக்காக மட்டுமே செல்வத்தை செலவழிக்க கூடியவர்கள் ஆவர்.

3. சிம்மம்
23 ஜூலை – 22 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் மிகச் சிறந்த செல்வ வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது பிறப்பு ஏழ்மையில் ஆரம்பித்தாலும் கூட இவர்கள் தங்களது சொந்த முயற்சியினால் செல்வந்தராவது என்பது உறுதி..

தலைமை
இவர்களுக்கு தங்களது நிதி நிலைகளை எப்படி கையாழ்வது என்பது மிக நன்றாக தெரியும். இவர்கள் எப்போதும் சரியான சேமிப்பு முறையை தான் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள்.

4. கன்னி
23 ஆகஸ்ட் – 22 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து விதமான நிதி சம்பந்தப்பட்ட வேலைகளையும் சிறப்பாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது முடிவுகளை தீர்க்கமாகவும் தெளிவாகவும் எடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

பொருத்தமான தொழில்
கன்னி ராசிக்காரர்கள் தங்களது பிஸினஸ் டீல்களை சுமூகமாக பேசி முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில்களில் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள்.

5. விருச்சிகம்
23 அக்டோபர் – 21 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பண விஷயத்தில் எப்போதும் கரார்ராக இருக்க கூடியவர்கள்.. ஒவ்வொரு விஷயத்திற்கு செலவு செய்யும் போதும் யோசித்து செலவளிக்க கூடியவர்கள்..

செலவு
தாராளமாக செலவு செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் எப்படி எளிமையான முறையில் பணம் ஈட்டலாம் என்பது பற்றி சிந்திக்க கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களது முடிவுகள் எப்போதுமே சிறந்த பலனை தரக்கூடியதாக இருக்கும். இவர்கள் தங்களுக்கு விரும்பமான பாதையில் எப்போதும் செல்ல கூடியவர்கள். இதனால் தான் சென்ற பாதையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எந்த வழியிலாவது செல்வம் வந்து கொண்டே தான் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்! இந்த 6 ராசில உங்க ராசி இருக்க!
Next articleஇந்த ராசிக்காரர்கள் இதை தானம் செய்தால் செல்வந்தராகிவிடுவார்களாம்! உங்க ராசிக்கு என்ன பொருள்!