அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்ட வாழைத் தண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் பல நோய்களுக்கு நிவாரணியாக திகழ்கிறது.
குறிப்பாக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் பருகி வர உடல் பருமன் குறைவதோடு சிறுநீர் எரிச்சலைப் போக்கும், ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரையும், வயிற்றுப் புண்களை குணப்படுத்தும்,வயிற்று உப்பிசம் மற்றும் உடல் குளிா்ச்சி
என்பவற்றை குணப்படுத்தும்.
வாழைத்தண்டு ஜூஸ் 1
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக வெட்டி பூண்டு2 பல் , மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
வாழைத்தண்டு ஜூஸ் 2
வாழைத் தண்டினை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து வடிகட்டி சிறிது மோா் கலந்து இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள் , எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் பருகி வர வேண்டும்.
By: Tamilpiththan