தேனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க! மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய் சாப்பிடாதீங்க!

0

ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்குள் விஷத்தன்மையை அதிகரிக்க செய்து உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.

எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

தேன் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது, ஏனெனில் அது விஷமாகிவிடும்.

வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளகூடாது. மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் இவற்றை சாப்பிடக்கூடாது.

பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது, பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.
காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிடக் கூடாது.

உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.

உடல் குண்டாக இருப்பவர்கள், கோதுமையால் தயாரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் ஆஇயவற்றை சாப்பிடக் கூடாது.
வெண்கல பாத்திரத்தை நெய் வைத்து சாப்பிட பயன்படுத்தக் கூடாது.

வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன் ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், புளிப்பி அதிகம் சாப்பிடக் கூடாது.

கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.

மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெங்காயத்தை வெட்டி படுக்கை அறையில் வையுங்கள்! அப்பறம் பாருங்க ஆச்சர்யத்தை!
Next articleசிறுநீரக கற்களை நொறுங்கி, துகளாக அழிக்கும் “யானை வணங்கி”