கோபத்தை வெளிப்படுத்திய தொகுப்பாளினி! சின்மயி செய்வது முழுக்க முழுக்க தவறு!

0

பாடகி சின்மயி ஆரம்பித்த பாலியல் குற்றச்சாட்டு பிரச்சனை இப்போது வரை பெரிதாக வெடித்து வருகிறது. இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வர தொகுப்பாளினி அம்மு ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் MeToo குறித்து அவரிடம் கேட்க அதற்கு அவர், இது நம் முகத்தில் கரியை பூசிக்கொள்ளும் ஒரு விஷயம். இரண்டு பேருக்குமே இப்போது சந்தோஷமான வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் போது அந்த விஷயத்தை சொல்வதற்கான அவசியம் என்ன, இது என்ன விழிப்புணர்வா, எனக்கு ஒன்னும் புரியவில்லை.

என்னை பொறுத்த வரையில் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவர் பிரபலம் என்பதால் நியாபகத்தில் வைத்து வெளியே சொல்கிறார்கள், வேறு தெரியாத ஆட்களால் கூட நமக்கு பிரச்சனை வந்திருக்கும், அவர்களை இப்போது கூறுவார்களா?.

இப்போது உள்ளவர்களுக்கு எல்லாமே நன்றாக தெரியும் போது இதுபோல் ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று மற்றவர்களின் வாழ்க்கையில் ஏன் கருப்பு புள்ளி வைக்க வேண்டும் என்று கோபமாக பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசின்னத்திரை தொகுப்பாளர்களின்! சம்பள லிஸ்ட் இதோ!
Next articleஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்! வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்!