ஒரு மாதத்தில் பெண் அதிகபட்சமாக எத்தனை முறை உச்சகட்ட இன்பம் பெறுகிறார்கள்!

0

ஆர்சீவ்ஸ் ஆப் செக்ஸுவல் பிஹேவியர் என்ற ஆய்வு பத்திரிக்கையில் வெளியாகி உள்ள புதிய ஆய்வறிக்கையில். சில பெண்களால் மாதத்தில் 55 முறையாவது உச்சக்கட்ட இன்பம் பெற இயலும் என அறியப்பட்டுள்ளது. இதில், ஆச்சரியம் என்னவெனில் இது ஆணுடனான உறவு மூலம் பெண்கள் அடைவதில்லை. பெண் – பெண்ணுடனான உறவு மூலமாக தான் பெண்கள் மாதம் இத்தனை முறை உச்சக்கட்ட இன்பம் அடைய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துளளனர்.

ஆம்! நீங்கள் படித்தது சரியானது தான். ஆணுடனான உறவை காட்டிலும், ஓரினச் சேர்க்கை உறவில் தான் பெண்கள் அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைய முடியும் என்கிறது இந்த ஆய்வறிக்கை. இந்த ஆய்வறிக்கை தகவலில் இன்னும் சில அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளது

பெண்கள் மத்தியில் உச்சகட்ட இன்பம் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மொத்தம் மூவாயிரம் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களை இரண்டு குழுக்களாக ஆய்வு குழுவினர்கள் பிரித்தனர். முதல் பிரிவினர் முதன்மையாக ஆண் துணையுடன் உறவில் இணைவோர், இரண்டாம் பிரிவினர், முதன்மையாக பெண் துணையுடன் உறவில் இணைவோர். இந்த இரு பிரிவினரிடமும் அவர்களது உறவி குறித்த அனுபவங்கள் மற்றும் அதன் மூலம் அவர்கள் அடையும் உச்சக்கட்ட இன்பம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், அவர்கள் எப்படியான செக்ஸுவல் உறவில் இணைகிறார்கள், அதில் அவர்களது செயற்பாடுகள், விருப்பங்கள் என… ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடந்தது.

இதில் பெண்களுடன் உறவு கொள்ளும் பெண்கள் மாதத்தில் பத்து முறை உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்றும். ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மாதத்திற்கு 15 முறை உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் அறியப்பட்டது. ஆனால், எத்தனை முறை உறவு வைத்துக் கொள்கிறார் மற்றும் பெண்கள் அடையும் உச்சக்கட்ட இன்பத்திற்கும் சம்மந்தம் இல்லை. மேலும் இந்த ஆய்வில் வெளிப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், ஆண்களை விட பெண்களுடன் உறவில் இணையும் பெண்கள் மூன்று மடங்கு அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைகிறார்கள் என்பதாகும்.

இந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி ஆண்களுடன் உறவில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் 95% ஆண்கள் மட்டுமே உச்சக்கட்ட இன்பம் அடைகிறார்கள். மேலும், ஸ்ட்ரைட் எனப்படும் ஆண் – பெண் உறவில்… 73% தம்பதிகள் தான் ஒரே மாதிரியான உணர்வு அடைகிறார்கள்.

ஆண் – பெண் உறவை காட்டிலும், பெண் – பெண் உறவில் பெண்கள் அதிகப்படியாக உச்சக்கட்ட உணர்ச்சி அடைவதற்கு சில காரணங்களும் இந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆண் – பெண் உறவானது பெனட்ரெட் எனப்படும் ஊடுருவும் வகையிலான உறவாக தான் இருக்கிறது. இத்தகைய உறவில் ஆண்கள் மட்டுமே அதிகமகா இன்பம் அடைகிறார்கள். உறவில் ஈடுபடும் சில நிலைகள் மற்றும் செயற்பாடுகள் சார்ந்து பெண்கள் சில சமயங்களில் வலியை தான் அனுபவிக்கிறார்கள். ஆனால், பெண் – பெண் மத்தியிலான உறவில் ‘பிக் ஒ’ எண்ணும் செக்ஸ் செஷன் என்பதில் யார் முதன்மையாளர்கள் என்ற வேறுபாடு இல்லை. இருவரும் ஒருசேர்ந்து ஈடுபடுவதால் பெண்கள் இத்தையக உறவில் அதிகளவில் உச்சக்கட்ட இன்பத்தை பெறுகிறார்கள்.

இந்த ஆய்வினை நடத்திய நிபுணர்கள் பெண் – பெண் உடனான உறவில் தான் பெண்கள் அதிகமாக உச்சக்கட்ட இன்பத்தை நிறைய முறை அடைகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக… இத்தகைய உறவில் இருவரும்.. அவர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்குமோ அதை மட்டுமே மேற்கொள்கிறார்கள் என்ற காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் – பெண் மத்தியிலான உறவானது பெரும்பாலும் கிளிடோரிஸ், செக்ஸ் பொம்மைகள் மற்றும் ஓரல் செக்ஸ் போன்றவையாக இருப்பதால்… இவர்கள் இப்படியான உறவில் அதிகம் உச்சக்கட்ட இன்பம் பெறுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் ஆண்கள் தான் உச்சக்கட்ட இன்பத்தை அடைகிறார்கள். பெண்கள் மத்தியில் உச்ச்சகக்ட்ட இன்பம் அடைவது என்பது பல காரணங்களால் சிரமமாக இருக்கிறது, இதை இயல்பு என்றும் பல ஆய்வுகள் கூறி வந்த நேரத்தில். பெண்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 55 முறை உச்ச்சகக்ட்ட இன்பம் பெற முடியும் என இந்த ஆய்வு முடிவுகள் கூறப்பட்டுள்ளன. ஆண் – பெண் உறவிலும் பெண்கள் அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் எனில், அவர்கள் ஃபோர்-ப்ளேவில் ஈடுபட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇப்ப எனக்கு வயசு 33 தான் ! என்ன வேசின்னு சொல்றவங்களுக்கு, என் வாழ்க்கைய பத்தி என்ன தெரியும்?
Next articleகர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!