அண்மையில் நிறைவு பெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா மாப்பிள்ளை ஆனார். நீண்ட நாளாக அவர் தன் வாழ்க்கை துணையை தேடி வந்தார்.
காதல், ஜாதகம் எதுவும் அவருக்கு செட்டாகவில்லை என்றே சொல்லலாம். ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் யாருக்கும் கல்யாணம் நடக்கவில்லை என்பது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியின் நேயர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தான். ஆரம்பத்திலேயே இது பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரிந்துகொண்ட நிகழ்ச்சி குழு தொடக்கத்தில் அவரிடம் நிகழ்ச்சி பற்றி பேசியபோது அவர் நமக்கெல்லாம் இது செட்டாகாது என சொல்லிவிட்டாராம்.
முயற்சி செய்து பார்க்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் திட்டியவர்கள் பின் வாழ்த்தினார்கள். இதில் நீங்கள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆனால் நடந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. இல்லையெனில் முடிவை இறுதியாக பார்த்துக்கொள்ளலாம் என கூறி ஆர்யாவை அக்ரீமெண்ட் போடவைத்தார்களாம். செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை