சின்னத்தம்பி சீரியலில் ஹீரோவாக நடித்துவரும் ப்ரஜன் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் பலரையும் ஈர்த்தவர். அவரின் மனைவி நடிகை சாண்ட்ரா.
அவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது தான் அவர்கள் முதல் குழந்தை பெறவுள்ளனர். சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு இது பற்றிஅறிவித்தனர்.
இந்நிலையில் இத்தனை வருடங்கள் ஏன் குழந்தை பெறவில்லை என உருக்கமாக பேசியுள்ளார் சாண்ட்ரா.
“நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் துணைக்கு யாருமே இல்லை. இருந்த பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். இத்தனை வருடங்கள் வேலை வேலை என்று ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. பிரஜன் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியலில் நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்” என சாண்ட்ரா கூறியுள்ளார்.